Published : 02 Jan 2018 03:18 PM
Last Updated : 02 Jan 2018 03:18 PM

வார ராசிபலன் 04/01/2018 முதல் 10/01/2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சப்தம ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் குரு சஞ்சாரத்தால் மிக அதிக நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள். மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவுகளிடம் இயல்பு நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வரும். நீண்ட நாள் பிணக்குகள் முடிவுக்கு வரும்.

திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கிக் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். மேலிடத்துடன் இருந்து வந்த உரசல்கள் அகலும்; திறன்கள் அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கலைத்துறையினருக்குச் சுணக்க நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் அகலும். மாணவர்களின் படிக்கும் திறன் அதிகமாகும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவான நிலையில் இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனைத் தரிசித்து சஷ்டி கவசம் சொல்லி வணங்க எல்லாத் துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு வந்து செரும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.  விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் தடைகள் கண்டாலும் வெற்றி பெறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். திடீர் செலவுகள் உண்டாகும். அக்கம்பக்கத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.

எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு நண்பர்கள், அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். அரசியல்வாதிகள் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்ரம் படிப்பதும் லட்சுமி பூஜை செய்வதும் பணசிக்கலை நீக்கும், வாழ்வு வளம் பெறும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வசதிகள்  பெருகும். ராசிநாதன் சஞ்சாரம் சுகத்தையும் சவுக்கியத்தையும் தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட காலப் பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை குரு தருவார். உடல் ஆரோக்கியம் பெறும். மன இறுக்கம் நீங்கும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்னப் பிரச்சினைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

தனஸ்தானத்திலிருக்கும் ராகுவால் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகம் தொடர்பான  பிரச்சினைகள் தீரும். பெண்களின் ஆலோசனைக்கு மரியாதை ஏற்படும். கலைத்துறையினருக்கு மனதில் உறுதி ஏற்படும். அரசியல்வாதிகளின் வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதையும் சற்று கவனமாகச் செய்ய வேண்டும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.  வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 3, 5

பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் சனிக்கிழமை அன்று வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தித் தெளிவு ஏற்படும். உடல், ஆரோக்கியம் பெறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும்.

மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெண்களுக்குத் திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு மனதிலிருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெறப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சினை தீரும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். சந்தோஷம் உண்டாகும். எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

மேலதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பதற்றம்  நீங்கும் நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்  பெண்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அரசியல்வாதிகள் அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சில் இனிமையும் சாதுரியமும் காரிய சித்தியை அளிக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாகப் பணியாற்ற வேண்டும்.  வர்த்தக ஆணைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம்.

குடும்பத்திலிருப்பவர்கள் உங்களை ஆலோசிக்காமல் முடிவெடுப்பது மன வருத்தத்தைத் தரலாம். பெண்களுக்குப் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண்பழி ஏற்படலாம். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: புதன்கிழமையன்று அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x