Published : 21 Nov 2023 04:04 AM
Last Updated : 21 Nov 2023 04:04 AM

கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் @ விருதுநகர்

விருதுநகர்: விருதுநகர் மேலரத வீதியில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசொக்க நாதர் உடனுறை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை முதல் சோமவாரத்தை யொட்டி, உலக நன்மைக்காக ஆயிரத்து 8 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் ஆயிரத்து 8 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சங்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

அதையடுத்து மூலவருக்கு ஆயிரத்து 8 சங்கு களில் புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சொக்க நாதர் அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x