Published : 08 Nov 2023 07:09 AM
Last Updated : 08 Nov 2023 07:09 AM

பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆகம விதிகளின்படி, நேற்று கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்படும் பணியான ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 9 மணி வரை கற்ப கிரகம், கொடிமரம், பலிபீடம், விமான கோபுரம், முகப்பு கோபுர வாசல் மற்றும் இதர உப சன்னதிகள் என அனைத்தும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x