Published : 27 Oct 2023 07:26 AM
Last Updated : 27 Oct 2023 07:26 AM

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை திருப்பதி கோயில் மூடல்

கோப்புப்படம்

திருமலை: சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 முதல் 2.22 வரை நிகழ உள்ளது.

இதனையொட்டி, முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆதலால் 29-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும். சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் அன்றைய மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x