Last Updated : 27 Nov, 2017 11:37 AM

 

Published : 27 Nov 2017 11:37 AM
Last Updated : 27 Nov 2017 11:37 AM

சந்தோஷம் பொங்கச் செய்யும் சங்காபிஷேகம்!

கார்த்திகை மாதத்தின் இரண்டாவது சோம வாரம். இந்தத் திங்கட்கிழமையில் தென்னாடுடைய சிவனாரைத் தரிசனம் செய்ய மறந்துவிடாதீர்கள்.

சோமன், சோமநாதன் என்றெல்லாம் சிவனாருக்கு திருநாமங்கள் உண்டு. சந்திரனைப் பிறை போல் தன் முடியில், சிரசில் அணிந்த சிவபெருமானுக்கு, இந்த நாளில், அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறும்.

சங்காபிஷேகத்தைத் தரிசனம் செய்வது புண்ணியம் நிறைந்தது என்கின்றன ஞானநூல்கள். அதிலும் கார்த்திகை சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில், சிவபெருமானைத் தரிசியுங்கள். மனமும் வாக்கும் தெளிவாகும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடந்தேறும்.

சிவனாருக்கு உகந்தது வில்வம். தெரிந்தோ தெரியாமலோ, வில்வத்தால் அர்ச்சனை செய்த குரங்கு, மன்னனாகப் பிறப்பெடுத்த கதை, உண்டு இங்கே. உங்களால் முடிந்த அளவுக்கு வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானைத் தரிசியுங்கள். சிந்தையைத் தெளிவாக்கி, சிறப்புடன் வாழச் செய்வான் தென்னாடுடைய ஈசன்!

வாழ்வில் சந்தோஷம் தரும் சங்காபிஷேகத் தரிசனம்... இன்று. மறந்துவிடாதீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x