Last Updated : 18 Mar, 2015 12:44 PM

 

Published : 18 Mar 2015 12:44 PM
Last Updated : 18 Mar 2015 12:44 PM

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் புதன்கிழமை காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியா கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுலில் 6.6 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

வடமேற்கே 136 கிமீ தொலைவிலும் கடலுக்கடியில் 41 கிமீ ஆழத்திலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நிலத்திலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x