Published : 17 Jan 2015 11:50 AM
Last Updated : 17 Jan 2015 11:50 AM

பத்மஸ்ரீ வாரியர் - இவரைத் தெரியுமா?

$ சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அதிகாரி. 2008sம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ விஜயவாடாவில் பிறந்தவர். ஐஐடி டெல்லியில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கும், கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலை கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர்.

$ கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்தாலும், உற்பத்தி துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவர். சிஸ்கோ நிறுவனத்துக்கு வரும் முன்பு மோட்டரோலா நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றினார்.

$ போர்ப்ஸ், பார்சூன், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிகைகள் வெளியிட்ட பிஸினஸ் உலகின் சக்திமிகுந்த பெண்களில் பட்டியலில் இருந்தவர்.

$ கேப், கார்னெல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளின் இயக்குநர் குழுவிலும் இருப்பவர்.

$ பெண்களுக்கு நம்பிக்கை வேண்டும், ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களுக்கு கருத்து இருக்க வேண்டும், ஆனால் அது பிடிவாதமாக மாறாமல் அடுத்தவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும், மேலும் தாங்கள் செய்வதை விருப்பத்துடன் செய்ய வேண்டும் என்று தலைமை பொறுப்புக்கு வர இருக்கும் பெண்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x