Published : 17 Nov 2014 09:49 AM
Last Updated : 17 Nov 2014 09:49 AM

ஆத்தூரில் 52 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் விசாரணை

ஆத்தூர் அருகே தனியார் விதை பண்ணையில் பணியாற்றி வந்த 52 கொத்தடிமை தொழிலாளர்களை ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியில் விதைப் பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் பருத்தி உள்ளிட்ட விதைகளில் இருந்து உரம், மருந்து உள்ளிட்டவை தயாரிக்கும் பணி நடந்து வரு கிறது. இந்த பண்ணையில் வெளி மாநிலங்களில் இருந்து பலர் கொத்தடிமைகளாக அழைத்து வந்து பணியில் சேர்த்து வேலை வாங்கி வருவதாக அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் தமிழகத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வர்கள் பலர் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டத் தில் நேற்று முன் தினம் கொத்தடிமைகளாக இருந்த 28 பேர் மீட்கப்பட்டனர். அதேபோல, சத்தீஸ்கர் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், தலைவாசலில் இயங்கி வரும் விதை பண்ணையிலும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமையாக உள்ளதாக ஆத்தூர் ஆர்டிஓ ஜெயசந்திரனிடம் புகார் தெரிவித்தனர். ஆர்டிஓ ஜெயசந்திரன், தாசில்தார் தேன்மொழி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் விதை பண்ணையில் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கொத்தடிமையாக பலர் வேலை பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக விதை பண்ணை யில் பணியாற்றி வந்த கொத்தடி மைகள் 52 பேரை அதிகாரிகள் மீட்டு முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 42 பேரும், தமிழகத்தில் இருந்து 10 பேர் என மொத்தம் 52 பேரை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த ஆத்தூர் ஆர்டிஓ ஜெயசந்திரன் கூறியதாவது:

தலைவாசல் விதை பண்ணையில் பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த டானு, லைகாம், சோப்ராய், சாதுராம் உள்பட 42 பேரும், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 52 பேரை மீட்டு விசாரித்து வருகிறோம். முதல் கட்ட விசாரணையில் பலர் கொத்தடிமையாக வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். முழு விசாரணை நடத்திய பின்னரே யார் யார் கொத்தடிமையாக உள்ளனர் எனத் தெரியவரும். கொத்தடிமையாக இல்லாமல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இந்த பண்ணையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தால், அவர்கள் அங்கே வேலை பார்க்கலாம். கொத்தடிமையாக வேலை பார்ப்பதை ஒப்புக் கொள்பவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x