Last Updated : 29 Dec, 2014 11:01 AM

 

Published : 29 Dec 2014 11:01 AM
Last Updated : 29 Dec 2014 11:01 AM

துளசி பக்கோடா

என்னென்ன தேவை?

துளசி, கடலை மாவு - தலா 1 கப்

அரிசி மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன்

வெங்காயம் (நறுக்கியது) 1 கப்

பெருங்காயம் சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

துளசியை அலசி, நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு இவற்றுடன் நறுக்கிய துளசி, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இருமல், சளி, ஜலதோஷம் ஆகியவற்றுக்கு இந்தப் பகோடா நல்லது.

ராஜபுஷ்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x