Published : 11 Sep 2014 10:23 AM
Last Updated : 11 Sep 2014 10:23 AM
மத்திய இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப் பகுதியில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலவேசி தீவுக்கும் மலுக்கு தீவுகளுக்கும் இடையே மொலுக்கா கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுமானியில் 6.2 அலகுகளாக பதிவாகியது. மனாடோ, கொரொன்டலோ நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கொரோன்டலோ நகரில் நிலநடுக்கம் 5 வினாடிகள் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT