பாகிஸ்தானில் தடை செய்த போதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘துரந்தர் 2’ தொடர்ந்து முதலிடம்

பாகிஸ்தானில் தடை செய்த போதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘துரந்தர் 2’ தொடர்ந்து முதலிடம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​பாகிஸ்​தானில் தடை செய்​யப்​பட்ட போதும் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் அந்​நாட்​டில் துரந்​தர்-2 திரைப்​படம் தொடர்ந்து முதலிடத்​தில் நீடிக்​கிறது.

ஆதித்யா தார் இயக்​கத்​தில் துரந்​தர்-1 திரைப்​படம் கடந்த 2025-ம் ஆண்டு வெளி​யானது. இந்​தப் படத்​தில் ரன்​வீர் சிங், அக் ஷய் கன்​னா, ஆர்.மாதவன், உள்​ளிட்​டோர் நடித்​திருந்​தனர். பாகிஸ்​தானில் ரகசிய உளவாளி​யாக ஊடுரு​வும் இந்​தி​ய​ரான ரன்​வீர் சிங்​கின் கதை இது. இந்​தப் படத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான காட்​சிகள் இருந்​த​தால் பாகிஸ்​தான் மற்​றும் வளை​குடா நாடு​களில் படத்​துக்​குத் தடை விதிக்​கப்​பட்​டது. எனினும் இந்​தத் திரைப்​படம் ரூ. 1,000 கோடிக்​கும் மேல் வசூலித்து சாதனை படைத்​தது.

இதைத் தொடர்ந்து துரந்​தர்-2 படம் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளி​யாகி மிகப்​பெரிய வெற்​றியைக் குவித்​துள்​ளது. முதல் பாகத்​தைப் போல​வே, 2-ம் பாகத்தை திரை​யிடு​வதற்​கும் பாகிஸ்​தானில் தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்​தத் திரைப்​படம் கடந்த 14-ம் தேதி பாகிஸ்​தானில் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் வெளி​யாகி அதிக வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. பாகிஸ்​தான் திரையரங்​கு​களில் வெளி​யிடத் தடை இருந்​தா​லும், நெட்​பிளிக்​ஸில் வெளி​யிடு​வதற்​குத் தடை இல்​லை.

இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் நெட்​பிளிக்ஸ் தளத்​தில் வெளி​யான சில நிமிடங்​களில் படத்​துக்கு அதிக வரவேற்பு கிடைத்​துள்​ளது. அதிக அளவி​லான மக்​கள் இந்​தத் திரைப்​படத்தை ஓடிடி-​யில் காண ஆர்​வம் காட்​டினர். இதனால் ஓடிடி தளத்​தின் சர்​வர் கிராஷ் ஆனது என்று நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​தைச் சேர்ந்த அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார். இதனால் பாகிஸ்​தான் உட்பட பல நாடு​களில் நெட்​பிளிக்ஸ் தளத்​தில் தொடர்ந்து இந்​தத் திரைப்​படம் டிரெண்​டிங்​கில் உள்​ளது. கடந்த சில நாட்​களாக இந்​தப் படம் தொடர்ந்து முதலிடத்​தில் உள்​ளது.

இதுகுறித்து மாவியா உமர் பரூக்கி என்​பவர் கூறும்​போது, “பாகிஸ்​தானில் துரந்​தர் 2 படம் வெளி​யாகும் நேரத்​துக்​காக மக்​கள் ஆர்​வத்​துடன் காத்​திருந்​தனர். ஒரே நேரத்​தில் ஓடிடி தளத்தை லட்​சக்​கணக்​கான மக்​கள் அணுகிய​தால் சர்​வர் கிராஷ் ஆனது” என்​றார். துரந்​தர்​-2-ம் பாகம் வரும் ஜூன் 4-ம் தேதி ஜியோ ஹாட்​ஸ்​டார் தளத்​தில் வெளி​யாக​வுள்​ளது.

போட்டி படத்​துக்கு வரவேற்​பில்லை: துரந்​தர் திரைப்​படத்​தின் கதை​யானது பாகிஸ்​தானில் உள்ள லயாரி பகு​தியை மைய​மாகக் கொண்டு அமைக்​கப்​பட்​டிருந்​தது. துரந்​தர்​-1, துரந்​தர்-2 ஆகிய 2 படங்​களுமே இந்த லயாரி நகர வாழ்க்​கையை வெளிப்​படுத்​தின. இதனால் லயாரி நகர மக்​கள், துரந்​தர் பட லாபத்​தில் தங்​களுக்​கும் பங்கு வேண்​டும் என்று கோரிக்கை எழுப்​பினர்.

இந்​நிலை​யில் துரந்​தர் படத்​துக்கு போட்​டி​யாக பாகிஸ்​தானில், ‘மேரா லயாரி’ என்ற பெயரில் திரைப்​படம் தயாரிக்​கப்​பட்டு கடந்த 8-ம் தேதி வெளி​யானது. ஆனால், இந்​தப் படத்​துக்கு போதிய வரவேற்​பில்​லை. முதல் காட்​சிக்கு வெறும் 22 டிக்​கெட்​கள் மட்​டுமே விற்​பனை​யாகி​யுள்​ள​தாக தெரிய வந்​துள்​ளது.

பாகிஸ்தானில் தடை செய்த போதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘துரந்தர் 2’ தொடர்ந்து முதலிடம்
உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரருக்கு கயாவில் திதி கொடுத்த குடும்பத்தினர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in