Published : 16 Sep 2017 12:52 PM
Last Updated : 16 Sep 2017 12:52 PM
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
பேராசிரியர் தொ.பரமசிவன், பண்பாட்டு ஆய்வாளர்.
இப்போது வெளிவரும் பத்திரிகைகளில் ‘தி இந்து’ மேம்பட்ட பத்திரிகை என்று சொல்வேன். குறிப்பாக, நடுப்பக்கம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘தி இந்து’ நாளிதழின் கட்டுரையாளர்களும் வெளியிலிருந்து எழுதுவோரில் பி.ஏ.கிருஷ்ணன் போன்றோர் எழுதும் கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் சிறப்பான அம்சம். ‘தி இந்து’ வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் பற்றியும் அங்குள்ள எழுத்தாளர்கள் பற்றியும் எழுத வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. முடிந்த அளவுக்குத் தகவல் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT