Published : 26 May 2015 06:26 PM
Last Updated : 26 May 2015 06:26 PM

லாப நோக்கத்திற்காகவே அயோடின் உப்பு - மெய்யருவி

கட்டுரை:>உப்புக் கழுதைகள் எப்படித் தொலைந்தன?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மெய்யருவி கருத்து:

உப்பு தின்றால் அயோடின் பிரச்சினை வரும் என்பதெல்லாம் முழுவதுமாக ஒத்து கொள்ள முடியாது. அயோடின் கலந்து சாப்பிட்டு வரும் இப்போதுதான் எல்லோருக்கும் தைராய்டு பிரச்சினை அதிகமாக உள்ளது. இதெல்லாம் உப்பை பாக்கெட்டில் அடைத்து விற்கும் பெரும் நிறுவனங்களின் சூழ்ச்சி. ஒரு ருபாய் என்று இருந்த உப்பை அப்போதே 10 ருபாய் ஆக்கிவிட்டார்கள். ஐ டி சி இல் பணி புரிந்த சக ஊழியர் ஒருவர் சொன்னார்.

அந்த நிறுவனங்களில் அயோடினை தூவுகிறார்கள். அது எங்கே இருக்கும்? பறந்து விடும் என்று யாராவது இப்போது உள்ள உப்பில் அயோடின் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்களா? ஊழலின் மறு வடிவம்தான் இது. மகாராஷ்ட்ராவில் மாட்டிறைச்சியை தடை செய்தார்கள்.

ஆனால் அவர்கள் உண்ணுவதற்காக அடைத்து வைக்க பட்டு விற்கும் உணவில் சாக்லேட் முதல் நூடுல்ஸ் வரை, பெரும்பாலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி எல்லாம் உள்ளதே அதை என்ன செய்ய போகிறார்கள்?

அதே பாக்கெட்டில் e கோடுடன் விற்கிறார்களே அதை எல்லாம் தடை செய்வார்களா? ஏழைகள் உணவில் மட்டும்தான் இவர்கள் கை வைக்க முடியும்? இதில் எல்லாம் கை வைத்தால் அவர்கள் பணக்கார முதலாளிகள் அவர்களை விட்டுவிடுவார்களா? எனவே உப்பில் அயோடின் இருக்கவேண்டும் என்று சொல்வதில் உள்ள உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x