Published : 06 May 2015 05:57 PM
Last Updated : 06 May 2015 05:57 PM

சில மருந்துகள் பக்க விளைவு தரும்: ராகம் தாளம்

தலையங்கம்:>மருந்து மருந்துதானா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ராகம் தாளம் கருத்து

மாற்று மருத்துவ முறைகள் தவறானவை என்று எவராலும் உறுதியுடன் கூறமுடியாது. அது போல அதைவிட்டால் வேறு கதியில்லை என்றும் உறுதி கூறமுடியாது. இந்தியாவில் மட்டுமல்ல 200 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா நாடுகளிலுமே அவரவர்களுக்கு உள்ள நாட்டு மருத்துவ முறையில்தான் தங்களுடைய நோய்களை குணப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நவீன மருத்துவத்தில் எல்லா மருத்துவ முறைகளையுமே தரக் கட்டுப்பாடுக்கு உட்படுத்தித்தான் அதை செயல்படுத்த அனுமதிக்கிறார்கள். அப்படியிருந்தும் சில மருந்துகளின் பின் விளைவுகள் பல ஆண்டுகளுக்குப்பின்தான் தெரிய வருகின்றன. இதில் பக்க விளைவுகளும் உண்டு.

அதன்பின் அவற்றை தவிர்த்து விடுகிறார்கள். இந்த மாதிரி மற்ற மருத்துவ முறைகளில் செய்வதில்லை. அவை செயல் படும் முறையும் தெரியாது. அவற்றின் பின்விளைவுகளும் தெரியாது. பின் விளைவுகள் அதிக அளவில் அவற்றை பயன் படுத்தாதலால் தெரியாமல் போக வாய்ப்புண்டு.

அப்படியும் தங்கபஸ்பம் போன்ற உலோகங்கள் கலந்த மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு உண்டாகிறது என்றும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை நவீன மருத்துவம் எங்கோ சென்றுவிட்டது. அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற முறையில் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x