Published : 14 May 2015 05:03 PM
Last Updated : 14 May 2015 05:03 PM

கண்டும் காணாமல் இருப்பதா? - பூக்காரன்

செய்தி:>நாடாளுமன்றம் கேட்கத் தவறிய ஒரு பெண்ணின் அழுகுரல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பூக்காரன் கருத்து:

வறிய நிலையிலுள்ள பெண்களை, பணிப் பாதுகாப்போ, நிரந்தர வேலையோ, உறவினர், குடும்பத்தார், ஏன் கட்டிய கணவன் ஆதரவோ இல்லாத, உழைத்து மானத்தோடு வாழ விழையும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ துன்புறுத்துவோர் மானிடப் பிறவிகளே இல்லை.

உழைக்கும் பெண் தொழிலாளிகளை துன்புறுத்துவோர்களை அவர்கள் வாழும் போதே நரக வேதனை அனுபவிக்கும் வகையில் கட்டாயம் தண்டிக்கப் பட வேண்டும். இன்னும் அப்படித் துன்புறுத்துவதை அறிந்தும் கண்டும் காணாமல் இருக்கும் பொறுப்பற்ற தன்மையை சமூகமும் விட்டொழிக்க வேண்டும்.

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா". பாரதி தீர்க்க தரிசனத்தோடு பாடிய வரிகளை தினம் நினைவு கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x