Published : 30 Apr 2015 04:51 PM
Last Updated : 30 Apr 2015 04:51 PM

தங்கமெல்லாம் ஆவியாகி வெளியேறிவிட்டதா? - மோகன்ஜி

செய்தி:>திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் மாயம்? - ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை

தி இந்து ஆன்லைன் வாசகர் மோகன்ஜியின் கருத்து:

சுங்கத் துறை அலுவலர்களுக்கு உள்ள எல்லைகள், பறிமுதல் செய்யப்படும் பொருள்களுக்கு எவ்வாறு இரசீதுகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது போன்ற வழிமுறைகள் எல்லாம், உழைத்து, களைத்து, தாய்நாட்டிற்கு வரும் ஏழைத் தொழிலாளிகளுக்குத் தெரியாது.

குறிப்பாக 100 கிராம் என்பதை 10 கிராம் என்று எழுதிக் கொடுத்தாலும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அவசரம் அப்போது அவர்களுக்கு ஏற்படுத்தப்படும். வழிப்பறி கொள்ளைக்காரர்கள் போல இப்போது புதிய வடிவங்களில் காட்சியளிக்கிறார்கள்.

தங்கள் கடமையை துஷ்பிரயோகம் செய்யும் சுங்கத் துறையின் இச்செயல் மிகவும் பொறுப்பற்றது.

மேலும், தற்போதைய செய்தியைப் பார்த்தால், ஒரு வேளை அந்த தங்கமெல்லாம் ஆவியாகி வெளியேறிவிட்டதோ என்னவோ? எதற்கும் ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து, வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தால், ஒரு வேளை உண்மை தெரிய வரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x