பேரவைத் தேர்தல் 2026: ஐடி துறைக்கு விடிவுகாலம் பிறக்குமா?

தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் இத்துறை பெரும் சவால்களை எதிர்கொள்கிறது
பேரவைத் தேர்தல் 2026: ஐடி துறைக்கு விடிவுகாலம் பிறக்குமா?
Updated on
3 min read

தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின் (ஐடி) ஆண்டு வரு​வாயைக் கொண்டு தமிழகத்​தின் ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் தலா 40 அதிநவீன மீச்​சிறப்பு மருத்​து​வ​மனையை (super speciality hospital) உரு​வாக்க முடி​யும் என்​றால் நம்​புவீர்​களா? அது உண்​மை​தான்.

தமிழக அரசின் பொருளாதர ஆய்​வறிக்​கை​யின்​படி மாநிலத்​தின் ஒட்​டுமொத்த உற்​பத்தி மதிப்​புக்கு (GSDP) ஏறக்​குறைய ரூ.2.5 லட்​சம் கோடி பங்​களிப்பை வழங்​கும் துறை இது.

தமிழகத்​தின் சமூக / பொருளா​தார வளர்ச்​சிக்கு ஐடி துறையின் பங்​களிப்பு முக்​கிய​மானது. ஏறத்​தாழ 11 லட்​சம் நேரடி வேலை​வாய்ப்​பு​களை​யும், உணவு, போக்​கு​வரத்து போன்ற சார்​புத் துறை​களில் 30 முதல் 35 லட்​சம் மறை​முக வேலை​வாய்ப்​பு​களை​யும் உரு​வாக்​கி, தமிழகத்​தின் தனி​நபர் வரு​மானம் உயர்​வதற்கு இந்​தத் துறை ஒரு மௌனக் காரணி​யாகத் திகழ்​கிறது. இவ்​வளவு முக்​கி​யத்​து​வம் கொண்ட ஐடி துறைக்​குப் போதிய கவனம் தரப்​படு​கிற​தா?

வரமும் சாப​மும்

உலகளா​விய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வளர்ச்​சி​யின் பின்​னணி​யில் தமிழக அரசு கடந்த ஆட்சி காலத்​தில் கொண்​டு​வந்​துள்ள ஜிசிசி (GCC - Global Capability Centres), கொள்​கை, தரவு மையக் கொள்கை (Data Centre Policy) ஆகியவை தகவல் தொழில்​நுட்​பத் துறைக்கு மேலும் ஊக்​கத்​தைக் கொடுக்​கின்​றன.

இக்​கொள்​கை​களின்​கீழ் வழங்​கப்​படும் வரிச் சலுகைகள், மானி​யங்​கள், உள்​கட்​டமைப்பு உதவி​கள் போன்ற பொருளா​தா​ரச் சலுகைகள், தமிழகத்தை நோக்​கிப் பன்​னாட்டு நிறு​வனங்​களை ஈர்க்​கின்​றன.

இது வெறும் முதலீடு​களை மட்​டும் கொண்டு வரு​வ​தில்​லை; பெரும் செயல்​திறன் கொண்ட தரமான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வதற்​கான வாய்ப்​பு​களும் இதன் மூலம் உரு​வாகிவரு​கின்​றன.

இருந்​தா​லும் இந்த மாபெரும் வளர்ச்​சி, வாய்ப்​புக்​குப் பின்​னால் பல கசப்​பான உண்​மை​களும் ஒளிந்​திருக்​கின்​றன. தற்​போதைய வேலை​வாய்ப்பு உரு​வாக்​கத்​துக்​கும், பெரு​கிவரும் இளைஞர்​களின் எண்​ணிக்​கைக்​குப் பெரும் இடைவெளி இருக்​கிறது.

இதனால் படிப்​புக்கு ஏற்ற வேலை கிடைக்​காமல் பல இளஞர்​களின் கனவு​கள் சிதைகின்​றன. இந்த இக்​கட்​டான சூழலைப் பயன்​படுத்​திக்​கொண்​டு, சில நிறு​வனங்​கள் ‘வேலை உறு​திப் பத்​திரங்​கள்’ (Bond-based employment) மூலம் இளைஞர்​களைப் மூன்று முதல் ஐந்து ஆண்​டு​வரை நிர்​பந்​தப்​படுத்தி எந்​த​விதச் சம்பள உயர்​வும் இல்​லாமல் பணி​யமர்த்​துகின்​றன.

இது ஒரு நச்​சுத்​தன்மை வாய்ந்த பணிச் சூழலை (Toxic work culture) உரு​வாக்​கு​கிறது. ஊழியர்​களின் அடிப்​படைச் சுதந்​திரத்​தைப் பறிக்​கும் வகை​யில், சில நிறு​வனங்​கள் நடந்​து​கொள்​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in