நகரமயமாதல் மட்டும்தான் வளர்ச்சியா?

நகரமயமாதலுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவம் கிராமப்புற வளர்ச்சியைக் கேள்விக்குறி ஆக்கிவிடும்
நகரமயமாதல் மட்டும்தான் வளர்ச்சியா?
Updated on
3 min read

அண்மையில் வெளியான 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, பல புதிய அணுகுமுறைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, நகரமயமாதலை (Urbanisation) வேகப்படுத்தும் நோக்கத்துடன் சில ஊக்குவிப்புக் கருத்துகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நகரமயமாதல் குறித்த அளவுகடந்த அக்கறை, சமநிலையற்ற வளர்ச்சிக்கான பாதையாக மாறிவிடுமோ என்கிற கேள்விக்கு வழிவகுத்திருக்கிறது.

​விரிவடைந்த பணிகள்

அரசமைப்புச் சட்டக்கூறு 280இன் கீழ், ஐந்தாண்​டு​களுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவரால் அமைக்​கப்​படும் நிதி ஆணையம், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அமைப்பு.

1993இல் மேற்கொள்​ளப்பட்ட 73ஆவது, 74ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்​தங்​களுக்குப் பிறகு, இந்த ஆணையத்தின் பங்கு கணிசமாக விரிவடைந்தது. மாநில அரசுகளுக்கு மட்டுமன்றி, ஊரக உள்ளாட்​சிகள் (Rural Local Governments), நகர்ப்புற உள்ளாட்​சிகள் (Urban Local Governments) ஆகியவற்றுக்கும் எவ்வாறு நிதிப் பகிர்வு செய்ய​ வேண்டும் எனப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த அமைப்​புக்கு உண்டு.

அந்தந்த மாநில நிதி ஆணையங்​களின் (State finance commission) பரிந்துரைகளின் அடிப்​படையில் ஊரக உள்ளாட்​சிகளுக்​கும் நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கும் அவற்றின் வளங்களை நிரப்ப ஒரு மாநிலத்தின் ஒருங்​கிணைந்த நிதியை அதிகரிப்​ப​தற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்​ளப்​படு​கின்றன.

நகரமய​மாதலுக்கு முக்கி​யத்துவம்

ஒவ்வொரு நிதி ஆணையமும் பரிந்துரைகளுக்கு முன்னால் தனது அணுகு​முறையை (Approach) விளக்​கும். 16ஆவது நிதி ஆணையம் முதன்​முறையாக நகரமய​மாதலைத் தனித்து​வ​மாகக் குறிப்​பிட்​டுள்ளது. ‘வேகமான நகரமயமாதல் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டு​கோலாகச் செயல்​படும்’ என ஆணையம் கருதுகிறது.

ஆனால், இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் சமூக-அரசியல் சூழல்களை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட பார்வையைத் தந்துள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.

நகர வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி​யுடன் மட்டுமே தொடர்​புடையது அல்ல; அது சமூகச் சமத்துவம், மக்கள் பங்கேற்பு, சுற்றுச்​சூழல் நிலைத்​தன்மை, வாழ்வா​தாரப் பாதுகாப்பு ஆகிய பல பரிமாணங்​களைக் கொண்டது.

இவற்றைத் தவிர்த்து​விட்டு நகரமய​மாதலை மட்டும் முதன்​மையான இயக்கும் காரணி​யாகப் பார்ப்பது, உள்ளடக்கிய வளர்ச்சி (inclusive development) நோக்கத்​துக்கு முழுமை​யாகப் பொருந்​தாது.

தரவின் தரம்

10ஆவது நிதி ஆணையம் முதல் தற்போதுவரை, நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கான நிதிப் பங்கு தொடர்ந்து அதிகரித்து​வரு​கிறது. ஆனால், இந்த உயர்வுக்கு அடிப்​படையாக இருக்கும் தரவுகளின் தரம் என்ன? அதே 16ஆவது நிதி ஆணைய அறிக்கை​யிலேயே, உள்ளாட்​சிகளுக்கான நிதித் தரவுகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் இறுதிவரை நீடித்​த​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in