உயர் கல்வி ஆணைய புதிய மசோதா | சொல்... பொருள்... தெளிவு

உயர் கல்வி ஆணைய புதிய மசோதா | சொல்... பொருள்... தெளிவு
Updated on
2 min read

நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ‘இந்திய உயர் கல்வி ஆணைய மசோதா 2025’ தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகும் நிலையில், இந்திய உயர் கல்வியில் பெருமளவில் மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பல்கலைக்​கழகங்கள், அவற்றுக்கு உள்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றின் உயர் கல்வியை நிர்வகிக்க - பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்​திந்​தியத் தொழில்​நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) ஆகிய அமைப்புகள் செயல்​படு​கின்றன.

தனித்​தனி​யாகச் செயல்​படும் இவற்றைக் கலைத்து​விட்டு, அனைத்து உயர் கல்விச் செயல்​பாடு​களையும் இந்திய உயர் கல்வி ஆணையத்​தின்கீழ் (Higher Education Commission of India - HECI) கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்​துள்ளது. இதில் மருத்​துவம், சட்டக் கல்லூரி​களுக்கு மட்டும் விலக்கு அளிக்​கப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

கலைக்​கப்​படும் அமைப்புகள்: இந்தியாவில் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்​கழகங்கள், அவற்றுடன் இணைக்​கப்​பட்​டு உள்ள கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களை வழிநடத்துவது யுஜிசி அமைப்பு. பொறியியல், தொழில்​நுட்பப் பல்கலைக்​கழகங்​களும், அத்துறை சார்ந்த உயர் கல்வி நிறுவனங்​களும் ஏஐசிடிஇக்குக் கட்டுப்​பட்டவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in