Published : 05 Feb 2024 06:13 AM
Last Updated : 05 Feb 2024 06:13 AM
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கல்லூரிகளில், மேற்கத்தியத் தாக்கத்தின் விளைவாகவே ராகிங் முறை உருவானது. கல்லூரிக்குச் சென்று கல்வி கற்றவர்கள் பெரும்பாலும் உயர் வர்க்கத்தினராகவும் பொருளாதாரரீதியாகப் பலம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். படிப்படியாகவே அனைத்து சாதியினரும் உயர் கல்வி பெற கல்லூரிகளுக்குள் நுழைந்தார்கள். இந்தச் சாதியப் பின்புலங்களில் வேற்றுமைகள் சிறிது நுழைந்தாலும்கூட, அப்போது அது பெரிதுபடுத்தப்படவில்லை.
கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்திய கல்விக்கூடங்களில் மிகக் கடுமையான ஒழுக்க நியதிகள் மாணவர்களை ஒரே நேரலையில் சீராகப் பயணிக்கவைத்தன. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அங்கு அதிகம் பயின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. சாதிரீதியான வேற்றுமைகள் இருந்தாலும், கல்லூரி வளாகங்களுக்குள் அதை வெளிப்படுத்த முடியாத சூழலும் இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT