Last Updated : 03 Jul, 2014 09:06 AM

 

Published : 03 Jul 2014 09:06 AM
Last Updated : 03 Jul 2014 09:06 AM

1917- முதல் உலகப் போரின் நான்காம் ஆண்டு

ஜனவரி 31: பிரிட்டன் படைகள் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலைத் தொடரப்போவதாக அறிவித்தது ஜெர்மனி.

பிப்ரவரி 3: தனது வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஜெர்மனியிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

பிப்ரவரி 24: பிரிட்டன் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத துருக்கிப் படைகள் பாக்தாதுக்குத் தப்பி ஓடின.

மார்ச் 11: மூன்று நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகு, பாக்தாத் நகரை பிரிட்டன் படைகள் கைப்பற்றின.

மார்ச் 15: புரட்சியாளர்களின் கை ஓங்கிய நிலையில், ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகினார்.

மார்ச் 26: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், துருக் கிப் படைகளுக்கு எதிரான முதல் சண்டை யில் இறங்கியது பிரிட்டன்.

ஏப்ரல் 6: ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. படைகளைப் பலப்படுத்தும் ஏற்பாடுகள் துரிதகதியில் தொடங்கின.

ஏப்ரல் 19: பாலஸ்தீனத்தில் இரண்டாம் காஸா சண்டை தொடங்கியது. துருக்கிப் படைகளின் தாக்கு தலில் 6,000 பிரிட்டன் வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜூன் 13: லண்டன் நகரின் மீது பெரிய அளவிலான விமானத் தாக்குதலைத் தொடங்கியது ஜெர்மனி.

ஜூன் 25: அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு பிரான்ஸைச் சென்றடைந்தது.

ஆக்ஸ்ட் 20: பிரெஞ்சு - ஜெர்மன் படைகளுக்கு இடையே மூன்றாம் வெர்டன் சண்டை தொடங் கியது.

அக்டோபர் 19: பிரிட்டன் மீதான கடைசி விமானத் தாக்குதல் நடந்தது. 11 ஜிப்லின் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

நவம்பர் 7: காஸா பகுதியைக் கைப்பற்றியது பிரிட்டன்.

டிசம்பர் 11: துருக்கியரின் 673 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது பிரிட்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x