Published : 04 Apr 2023 06:34 AM
Last Updated : 04 Apr 2023 06:34 AM
திசை தெரியாமல் தவிக்கும் உயர்-மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் நிலை, பள்ளிகளின் அவல நிலைக்கு இணையாக உள்ளது. வழிகாட்ட ஆளில்லாத எளிய குடும்பத்து மாணவர்கள், கருணையற்ற போட்டி உலகின் கத்தி முனையில் நடக்க இயலாமல் சரிந்துவிழும் இளைஞர்கள், சுய அழிவிலும், சமூக எதிர்ப்பிலும், வன்முறைகளிலும் தங்களை இழந்துகொண்டிருக்கும் கதியற்ற வளரிளம் பருவத்தினர் எனப் பலரையும் பார்க்கிறோம். இரண்டு பக்கங்களிலும் ஏற்பட்டுள்ள இந்த இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்வது?
விரிவடைய வேண்டிய கனவு: முன்னாள் மாணவர்களை அரசுப் பள்ளிகளுடன் இணைக்கும் ஒரு புதிய திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை தொடங்கியிருக்கிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், இதுதொடர்பாக முன்னாள் மாணவர்களுக்குப் பல முறை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்; எவ்வகைகளில் எல்லாம் முன்னாள் மாணவர்கள் பள்ளிகள் மேம்பட உதவ முடியும் என்கிற வேண்டுகோளைத் தலைமைச் செயலர் இறையன்பு முன்வைத்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT