Last Updated : 31 Mar, 2023 06:20 AM

 

Published : 31 Mar 2023 06:20 AM
Last Updated : 31 Mar 2023 06:20 AM

ப்ரீமியம்
திருவாரூர் தேரும் தென்தமிழ் மரபும்

ஓட்டத்தைக் கவனப்படுத்தி தேர்த் திருவிழாவைத் ‘தேரோட்டம்’ என்பதும் உண்டு. சூரியனும் சந்திரனும் தேர்க் கால்கள். வேதங்கள் நான்கும் தேரில் பூட்டிய குதிரைகள். சாரதியாக இருப்பது பிரம்மா. இறைவன் தேர் ஊர்வதைப் பிரபஞ்சத்தின் இயக்கமாக இப்படி அர்த்தப்படுத்துவது ஒரு வழக்கம். திருவாரூர்த் தேரோட்டம்தமிழ் இலக்கிய மரபு ஒன்றைக் காட்சிப்படுத்துவதாகவும் அர்த்தப்படுத்த இயலும்.

திருவாரூர் தியாகேசர் கோயில் நாகஸ்வரக் கலைஞர் பழனியப்பன், தேரோட்டத்தில் தான் வாசிக்கும் பாடல்களைப் பற்றி எனக்குச் சில அரிய தகவல்களைக் கொடுத்தார். அவர் குடும்பத்தினர் பல தலைமுறைகளாகத் தியாகேசர் கோயிலின் ஆஸ்தான கலைஞர்கள். நான்கு வீதிகளையும் சுற்றித் தேர் நிலைக்கு வரும் தூரத்தை எட்டு அங்கணங்களாக்கி ஒவ்வொன்றிலும் இன்னின்ன பாடல்களை வாசிக்க வேண்டும் என்கிற முறை இருப்பதாக பழனியப்பன் சொன்னார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x