Published : 27 May 2022 06:58 AM
Last Updated : 27 May 2022 06:58 AM
குரங்கு அம்மை எனும் வைரஸ் தொற்று கடந்த வாரத்தில் 16 நாடுகளில் பரவிவருவதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததையொட்டி, உலக நாடுகள் பலவும் மீண்டும் கரோனா தொற்று பரவியதுபோல் பீதியில் உறைந்துவிட்டன. இதுவரை 131 பேரை இந்த நோய் பாதித்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் 100-க்கும் மேற்பட்டோரை இது பாதித்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. என்றாலும், வழக்கமாக இது பரவுகிற மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து, இதுவரை பரவாத நாடுகளில் பரவிவருவதுதான் இந்த பீதிக்கு முக்கியக் காரணம்.
குரங்கு அம்மை (Monkeypox) புதிய நோயல்ல. உலகில் இப்படி ஒரு நோய் இருப்பது முதன்முதலில் 1958-ல் டானிஸ் ஆய்வகத்தில் இருந்த குரங்குகளிடத்தில் அறியப்பட்டது. 1970-ல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். 2003-ல் அமெரிக்காவில் இது பெரிதாகப் பரவியதை வரலாறு பதிவுசெய்துள்ளது. ஆப்பிரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இது பரவத் தொடங்கியது அப்போதுதான். என்றாலும்கூட 81 பேருக்கு மட்டுமே இந்த நோய் அப்போது அங்கே பரவியது; இறப்பு எதுவும் இல்லை. இதைத் தொடர்ந்து, 2017-ல் நைஜீரியாவில் 172 பேருக்குப் பரவியதுதான் உலகளாவிய பரவலில் இது உச்சம் தொட்டது. இப்போதோ ஒரே நேரத்தில் இது பரவியுள்ள நாடுகளும் அதிகம்; பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதுதான் அநேகரையும் அச்சுறுத்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT