Published : 10 May 2022 07:27 AM
Last Updated : 10 May 2022 07:27 AM

ப்ரீமியம்
இலங்கை: மக்கள் எழுச்சியின் வெற்றி

எம். ரிஷான் ஷெரீப்

கடைசியில், இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்‌ச தனது பதவியை நேற்று (09.05.2022) ராஜினாமா செய்துவிட்டார். இலங்கையில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் எதிரொலியாக, நாட்டின் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராகக் கிளம்பிய பாரிய அழுத்தத்துக்கு மத்தியில், இந்தத் தீர்மானத்தைப் பிரதமர் எடுத்திருக்கிறார்.

இலங்கையின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பல தடவை பதவி வகித்துள்ள மகிந்த ராஜபக்‌ச தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையை அவரே எதிர்பார்த்திராத ஒரு கணத்தில், எதிர்பார்த்திராத விதத்தில் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். ஏற்கெனவே பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துவிட்டதாக நாடு முழுவதும் நான்கு தடவை வதந்திகள் கிளம்பியிருந்தபோதிலும், இப்போதுதான் அந்தத் தகவல் அவரது உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் உண்மையாகியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x