Last Updated : 30 Jun, 2014 10:06 AM

 

Published : 30 Jun 2014 10:06 AM
Last Updated : 30 Jun 2014 10:06 AM

1914- முதல் உலகப் போரின் முதலாம் ஆண்டு

ஜூலை 20:

செர்பியாவின் எல்லைப் பகுதியில் தமது படைகளை ஆஸ்திரியா ஹங்கேரி பேரரசு நிறுத்தியது.

ஜூலை 25:

படைகளை அணிதிரட்டுமாறு தளபதிகளுக்கு செர்பியா ஆணையிட்டது. ரஷ்யா ஆஸ்திரியா எல்லையில் படையினரை நிறுத்த ரஷ்யா ஏற்பாடு செய்தது.

ஜுலை 28:

செர்பியா மீது ஆஸ்திரியா ஹங்கேரி பேரரசு போர் அறிவித்தது.

ஜூலை 29:

தன்னால் நடுநிலை வகிக்க முடியாது என்று ஜெர்மனியிடம் பிரிட்டன் எச்சரித்தது. செர்பியத் தலைநகர் பெல்கிரேடில் ஆஸ்திரியப் படைகள் குண்டு மழை பொழிந்தன.

ஆகஸ்ட் 1:

படைகளை அணிதிரட்ட பிரான்ஸ் உத்தரவிட்டது. ரஷ்யா மீது ஜெர்மனி போர் அறிவித்தது. இத்தாலியும் பெல்ஜியமும் நடுநிலை வகிப்பதாக அறிவித்தன.

ஆகஸ்ட் 3:

பிரான்ஸ் மீது போர் அறிவித்தது ஜெர்மனி. படைகளை அணிதிரட்டுமாறு பிரிட்டன் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 6:

பிரிட்டனின் போர்க் கப்பலான ஹெச்.எம்.எஸ். ஆம்பியன் கப்பலை, ஜெர்மன் கப்பல் படை வடக்குக் கடலில் மூழ்கடித்தது. 150 வீரர்கள் உயிரிழந்தனர். பிரிட்டன் தரப்பில் முதல் இழப்பு அது.

ஆகஸ்ட் 11:

“பிரிட்டன் பிரஜைகளே! உங்கள் நாட்டுக்கும் மன்னருக்கும் நீங்கள் தேவை” என்ற வாசகத்தை பிரிட்டன் அறிவித்தது. இரண்டே வாரத்தில் படையில் ஒரு லட்சம் பேர் சேர்ந்தனர்.

ஆகஸ்ட் 13:

‘ராயல் ஃபிளையிங் கார்ப்ஸ்' என்றழைக்கப்பட்ட பிரிட்டன் விமானப் படை பிரான்ஸைச் சென்றடைந்தது.

செப்டம்பர் 6:

பிரான்ஸின் மார்னே ஆற்றின் கரையில் நடந்த சண்டையில், பிரிட்டன் தரப்பில் 13,000 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் தரப்பில் 2.5 லட்சம் பேரும் ஜெர்மனி தரப்பில் 2.5 லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 16:

பிரிட்டிஷ் படையில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் மும்பையிலிருந்து புறப்பட்டு பாரசீக வளைகுடாவைச் சென்றடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x