Published : 06 Apr 2016 10:27 AM
Last Updated : 06 Apr 2016 10:27 AM

அறிவுக்குப் பரிசு ‘தி இந்து’ சந்தா

வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளியான ‘உண்மையான பாடசாலை’ கட்டுரை மனதை நெகிழவைத்துவிட்டது. ஒரே ஒரு குழந்தைக்குக் கல்வி கொடுப்பதே பெரிய காரியமாக இருக்கும் இந்தக் காலத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வியைக் கொடுக்கும் வாசுதேவனும், உமா மகேஸ்வரியும் பாராட்டுக்குரியவர்கள். சென்னை கண்ணகி நகரில் அவர்கள் நடத்தும் பாபாசாஹேப் அம்பேத்கர் இலவச இரவுப் பாடசாலை குறித்த அந்தக் கட்டுரையைப் படித்தபோது, குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படிக்கக் கொடுப்பதைவிட நல்ல விஷயம் என்ன இருக்க முடியும்! உடனடியாக, ஓராண்டுக்கான சந்தாவை நானே செலுத்திவிட்டேன். குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்துக்கு என்னாலான உதவி என்று எண்ணி மகிழ்கிறேன்.

- கே. ருக்மாங்கதன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x