Published : 26 Feb 2016 11:06 AM
Last Updated : 26 Feb 2016 11:06 AM

வளர்ச்சிக்கு உதவும்

‘கரையோரப் பொருளாதார வளர்ச்சி அவசியம்’ என்ற தலையங்கம் வாசித்தேன். கடலோரப் பகுதியின் வளர்ச்சிக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை சீனத்துடன் ஒப்பிட்டு மிகத் தெளிவாகக் கூறுகிறது தலையங்கம். முதலாவதாக, மத்திய - மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அவசியம். சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, வளர்ச்சித் திட்டங்களைக் காலா காலத்தில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். கரையோரப் பொருளாதார மண்டலம் அமைப்பதும், தொழிலாளர்களுக்குத் தொழிற்பேட்டைகளை உருவாக்குவது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. மொத்தத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தலையங்கம் கூறும் யோசனை உதவும் என்றே தோன்றுகிறது.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x