Published : 23 Dec 2015 10:31 AM
Last Updated : 23 Dec 2015 10:31 AM

மக்களாட்சியிலும் அடிமை முறையா?

‘நற்குறி சொன்ன நாஞ்சில் நாட்டு அடிமைகள்’ கட்டுரை படித்தேன். நாஞ்சில் நாட்டில் மட்டுமல்ல, பிற இடங்களிலும்கூட மன்னராட்சி இருந்தபோது அடிமைகள் முறை இருந்தது என்பதை மறுக்க இயலாது. மன்னராட்சி முறை என்பதே சர்வாதிகார ஆட்சி முறை என்பதால், யாரும் கேள்வி கேட்கவும் இயலாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி முறையில், அடிமை முறை இருப்பது வெட்கக்கேடானது. எல்லோரும் ஆமாம் சாமி போட்டுக் கைகட்டி வாய் பொத்தி அடிமையாக இருக்கும் நிலையில், அரசியல் சுதந்திரமின்மை, அலட்சியம், ஏரிகளுக்குப் பட்டா வழங்குவது, மணல் கொள்ளை போன்ற ஆட்சியாளர்களின் அக்கிரம செயல்கள் தாராளமாகவே நடக்கும். யார் தட்டிக் கேட்க முடியும்?

- சசிபாலன், மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x