Published : 07 Oct 2015 10:45 AM
Last Updated : 07 Oct 2015 10:45 AM

பி.நோட்ஸ் என்ற கருங்கடல்

‘கருப்புப் பணத்தின் பரமபதம்’ என்ற கட்டுரை கருப்புப் பணம் இந்தியாவில் தொடர்கதையாக இருப்பது குறித்த வலுவான விமர்சனத்தை வைத்தது. ஆனால், ஒழிக்க மனம் இருந்தால்தானே ஒழிக்க முடியும். பங்குச் சந்தையின் நடனத்துக்குக் காரணமே பி-நோட்ஸ்தான்.

பெரும்புள்ளிகள் பலர் வெளிநாட்டினர் உதவியோடு பி-நோட்ஸ் முதலீட்டாளர்கள் என்ற மாறுவேடத்தில் முத லீடு செய்கிறார்கள். ஆக, பி-நோட்ஸை ஒழிக்க முடியாது.

வெளிநாட்டு வங்கியில் பணத்தை அதிக அளவில் முதலீடு செய்தால் லிபியாவுக்கு ஏற்பட்ட நிலைமை அந்தப் பெரும்புள்ளிகளுக்கு வராதா? பணம் குட்டி போட்டுப் பல மடங்கு ஆக வேண்டாமா? பி-நோட்ஸ் சர்ச்சையை எழுப்பினால் சாதாரண மனிதருக்கு வருமான வரி நோட்டீஸ் வரும். இதுதான் கருப்புப் பணத்தின் சதுரங்கம். சதுரங்கத்தின் பகடை சாமான்ய மனிதர்கள்தான்.

- வீ. யமுனா ராணி,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x