Published : 08 Oct 2015 11:03 AM
Last Updated : 08 Oct 2015 11:03 AM

கருப்புப் பணமும் கடமை உணர்வும்

‘கருப்புப் பணத்தின் பரமபதம்’ கட்டுரை தேசத்தின் பொருளா தாரத்தைச் சீர்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது. பங்குச் சந்தைகளில் ஒரு சாரார் நடத்தும் கருப்புப் பணப் புழக்கமும், கேமன் தீவுகள் போன்று வரிகளின் சொர்க்க வாசல்கள் நம் நாட்டில் திறந்துவிடும் பொருளாதாரச் சீர்கேடுகளும் தடுக்கப் பட வேண்டும்.

சரியான தனிநபர் ஆவணங்களை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட ஆதார் எண்போல், தனிநபரின் அடையாளத்தை இறுதி யாகவும், உறுதியாகவும் கொண்ட, குடிமகனின் ஒரே அடையாள எண்ணை, அரசு ஆவணங்களிலும், வங்கிகள், வருமான வரி என அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் குறிப்பிடும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

- கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x