Published : 03 Oct 2015 10:43 AM
Last Updated : 03 Oct 2015 10:43 AM
காந்தியைப் பற்றிய மார்க்ஸின் பார்வை அழகானது. தலைமுறை இடைவெளிகளில் முக்கியமானது, முந்தைய தலைமுறை மனிதர்களின் நம்பிக்கையை இன்றைய மனிதர்கள் தர்க்கம் செய்வதும், நம்ப மறுப்பதும்தான்.
மேலாடை இன்றி சுற்றிய மனிதன், விமானத்தில் பயணம் செய்யாதவர், பதவிகளை ஏற்க மறுத்தவர் என இன்றைய தலைமுறையினர் அவர் தியாகங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். சுயநலம் சிறிதும் இல்லாமல் ஒடுக்கப்படும் மக்களுக்கு அருகிலேயே கடைசிவரை நிற்பவர்கள்தான் தலைவராகின்றனர்.
காந்தி அவ்வாறு நின்றார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் போதிய செல்வம் இருக்கிறது. ஆனால், ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார் காந்தி. இது இன்றைய தலைமுறை யினருக்கும் ஆட்சியாளருக்கும் மிகவும் பொருந்தும்!
- ப.மணிகண்டபிரபு,திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT