Published : 14 Sep 2015 11:00 AM
Last Updated : 14 Sep 2015 11:00 AM

அநாவசியமான பிரச்சினை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், அவ்வாறு விற்பனை செய்யப்படாததை உறுதிப்படுத்தவும், மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில், ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையைக் காரணம்காட்டி இறைச்சி உணவுகளுக்கு அரசுகள் தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் நீதிமன்றமே இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது என்று ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் குற்றம்சாட்டியிருக்கிறார். உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களில் அரசு நிர்வாகம் தலையிடுவது சரியல்ல என்றே தோன்றுகிறது.

- எம். முத்துகிருஷ்ணன், திருவள்ளூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x