Published : 27 Aug 2015 10:31 AM
Last Updated : 27 Aug 2015 10:31 AM
பிரதமரா, கட்சித் தலைவரா? தலையங்கம் படித்தேன். தேர்தல்களின்போது கட்சித் தலைவராகவும், தேர்தல் அல்லாத காலங்களில் பிரதமராகவும் இருப்பவர்தான் மோடி.
பிஹார் மாநிலத்தில் நான்கு விமான நிலையங்கள் 1,700 கோடி செலவில் கட்டப்படவுள்ளது யாருடைய பயன்பாட்டுக்காக, அம்மாநிலத்தின் சாமானிய மக்களின் பயன்பாட்டுக்காகவா? நிச்சயமாக இல்லை. இப்போது புரிகிறதா மோடியின் முதலீட்டாளர் நலன்சார்ந்த நிதி ஒதுக்கீட்டுப் பயன்பாட்டின் முறைமை. ஒதுக்கப்பட்டுள்ள நிதி முழுமையாக அம்மாநில அடித்தட்டு மக்களுக்குப் பயனுள்ளதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு ஒன்றும் பெரிதாக இல்லை. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆட்சியதிகாரமே அவர்களது இலக்கு.
- சே.செல்வராஜ்,தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT