Published : 07 Jul 2015 11:34 AM
Last Updated : 07 Jul 2015 11:34 AM

எப்போது புத்தகக்காட்சி நகரமாகும்?

மனுஷ்ய புத்திரனின் ‘ஒரு புத்தகக்காட்சி போதுமா?’ என்கிற கட்டுரை மிகவும் சரியானது. ஏனெனில், நான் கோவையிலிருந்து புத்தகக்காட்சிக்கு சென்னை மற்றும் ஈரோடுக்குச் சென்றுவருவேன்.

ஒவ்வொரு முறை செல்லும்போதும் கோவையில் இதுபோன்று புத்தகக்காட்சி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியது உண்டு.

வாசிப்பு என்பது சுவாசிப்புபோல என்பதை எப்போது உணரப்போகிறோம். கோவை ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் இணைந்துவிட்டது. ஆனால், எப்போது புத்தகக்காட்சி நகரமாகும்?

பி. நரசிம்மன்,கோயம்புத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x