Published : 30 Jun 2015 10:46 AM
Last Updated : 30 Jun 2015 10:46 AM

அதிகாரவர்க்கம் உணர வேண்டும்

நெருக்கடி நிலை பற்றி அறியாத எங்களைப் போன்றவர்கள் அதன் வரலாற்றை அறிய வழி வகுக்கின்றன, நெருக்கடி நிலை பற்றிய கட்டுரைகள்.

அதிகாரம் ஒருவரை எந்த அளவுக்கு சர்வாதிகாரியாக்கும் என நாடே உணர்ந்த காலகட்டத்தை நினைவூட்டுகிறது.

மக்கள் வழங்கும் அதிகாரத்தைத் தம் சுய விருப்பம்போலப் பயன்படுத்தினால் நாட்டின் எல்லா நிலை மக்களும் பாதிக்கப்படுவார்கள் என அதிகார வர்க்கம் உணர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களும் மிரட்டப்பட்ட வரலாறு மனதை வருத்தமுறச் செய்தன.

கொள்கைகளும் லட்சியங்களும் நிறைந்த அக்காலகட்ட அரசியல் நிலை, இன்றைய ஊழல் காட்சிகளும் அதிகார வெறியும்கொண்ட நிலையை எண்ணச் செய்கிறது. இன்றைய அதிகாரவர்க்கம் இந்த வரலாறுகளை எண்ணிப்பார்த்து நியாயமாக நடத்தல் அவசியம்.

- மோனிகா மாறன்,வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x