Published : 11 Mar 2015 10:35 AM
Last Updated : 11 Mar 2015 10:35 AM

தவறான முடிவு

கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்த மகாராஷ்டிர அரசைக் கண்டிக்கும் தலையங்கம் பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்திருக்கிறது.

சச்சார் உள்ளிட்ட பல குழுக்களின் அறிக்கைகளையும், நீதிமன்றங்களின் பரிந்துரைகளையும் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாகச் செயல்பட முனையும் மகாராஷ்டிர அரசு, இந்திய அரசியல் சாசனத்துக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்திப் பன்னாட்டு நிறுவனங் களுக்குத் தாரைவார்க்க முயல்வோர், வேளாண்நலன்/பசுப் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நீதிமன்றத்தின் அனுமதிக்கு எதிராக நடந்துகொண்டே, எல்லோருக்கும் பொதுவான/சமமான முன்னேற்றம் குறித்துப் பேசுவதும் விந்தையிலும் விந்தை!

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x