Published : 02 Mar 2015 10:43 AM
Last Updated : 02 Mar 2015 10:43 AM

தனியார் செழிக்க வழி

இந்திய வேளாண்மைத் துறை காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, நிதியமைச்சர் அத்துறை வளர்ச்சிக்கு(!)

சம்பிரதாய அறிவிப்புகளைச் செய்திருப்பது பெரிய ஏமாற்றம். வேளாண் துறையின் வர்த்தக மேம்பாடு மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை என்ற வாசகங்கள் இத்துறையில் தனியாரின் ஆதிக்கத்தை விதைப்பதற்கான பெருமுயற்சியோ என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும், நடுத்தர வருமானப் பிரிவினரைப் பொது மருத்துவ அமைப்பிலிருந்து விலக வைத்து, அவர்களைத் தனியார் மருத்துவ அமைப்புக்கு இட்டுச் செல்லும் பணிக்கு, மருத்துவ மேம்பாட்டுக்கான பொதுச் செலவை அதிகரிக்காததன் மூலமும் வருமான வரி விலக்குக்கான மருத்துவக் காப்பீட்டின் உச்சவரம்பை உயர்த்தியதன் வழியாகவும் நிதியமைச்சர் உத்வேகம் கொடுத்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் செழிக்க நிச்சயம் இது வழிவகுக்கும். குறைந்த வருமானப் பிரிவினர் வழக்கம்போல பொது முதலீடு குறைவாகச் செய்யப்படும் அரசு மருத்துவமனைகளைச் சார்ந்திருக்கும் நிலையே தொடரும்.

- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x