Published : 26 Mar 2015 11:12 AM
Last Updated : 26 Mar 2015 11:12 AM

தகர்க்கப்படும் நம்பிக்கை

ராமச்சந்திர குஹா எழுதிய ‘அறம் பிறழ்கிறார்களா உச்ச நீதிபதிகள்?’ கட்டுரை ஆழமான அலசல். மக்களின் கடைசி நம்பிக்கை நீதித் துறைதான்.

அந்த நம்பிக்கையையும் தகர்ப்பது போன்ற நிகழ்வுகள் நீதித் துறையில் நடை பெறுவது துரதிர்ஷ்டவசமானது.

எதிர் காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகள் ஏதாவது ஆதாயத்துக்காக அளிக்கப்பட்டவை எனும் சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டால், அதற்கு நிகழ்காலச் சம்பவங்கள்தான் காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. மக்களின் நம்பிக்கை நொறுங்கிப்போவதற்கு முன்னர் அரசியல் பின்னணி நீதித் துறையில் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தடுப்பது அவசியம்.

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x