Published : 09 Feb 2015 10:42 AM
Last Updated : 09 Feb 2015 10:42 AM

நியூட்ரினோ

‘நியூட்ரினோ திட்டத்தால் மனித குலத்திற்கு நன்மை ஏற்படும்’ என மத்திய அரசு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இத்திட்டத்தால், எனென்ன தீமைகள் ஏற்படாது என்று பட்டியலிட்ட மதிய அரசு, அதனால் வரப் போகும் ஒரு நன்மையைக் கூட சுட்டிக் காட்டவில்லை அல்லது சொல்ல முடியவில்லை.

இந்திய அணுசக்தித் துறையும் , பிற துறைகளும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாகவும் மத்திய அரசு சொல்கிறது. ஆனால், நியூட்ரினோ ஆய்வில் அணுசக்தித் துறையின் பங்கு என்ன என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. மொத்தத்தில் எல்லாமே மர்மமாகவே உள்ளது.

- சு. இராமசுப்பிரமணியன்,தோவாளை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x