Published : 24 Feb 2015 10:52 AM
Last Updated : 24 Feb 2015 10:52 AM

விழிப்புணர்வு வகுப்பு

மக்கள் பிரச்சினைகளைப் பற்றிக் குழுவாக விவாதித்து, அதில் நல்ல தீர்வு காண்பதுதான் சட்டமன்றத்தின் இலக்கணம்.

ஆனால், இப்போது சட்டமன்றம் மக்களின் தேவைகளைப் பற்றி விவாதிக்காமல், புகழ்பாடும் மன்றமாகவும், வசைபாடும் மன்றமாகவும் மாறிவிட்டது.

இதனால், மக்கள் வரிப்பணம்தான் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினால், இவர்களின் செயல்பாடுகள் மேம்படுமோ?

காலத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு குடியரசுத் தலைவரும், ஆளுநரும் இதில் கவனம் செலுத்தி சட்டமன்றம், நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.

பா. தங்கராஜ்,திப்பணம்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x