Published : 28 Feb 2015 10:12 AM
Last Updated : 28 Feb 2015 10:12 AM

பெளத்தத்தின் வீச்சு

முனைவர் பா. ஜம்புலிங்கத்தின் ‘மீசை வைத்த புத்தர்’ கட்டுரை, வரலாற்று ஆய்வாளர்கள் முதற்கொண்டு மாணவர்கள் வரையிலும் பெரும்பயன் அளிக்கக்கூடியது.

தமிழகத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பெரும்பான்மையாக மகாயான பௌத்தம் நிலைத்திருந்தது என்பதற்கு 2013-ல் நடைபெற்ற கருத்தரங்க அறிஞர் ஆய்வுக் கட்டுரைகள் சான்று பகர்கின்றன. இதை நூலாக காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேலும், முனைவர் ஜம்புலிங்கம் களப்பணியில் கண்டெடுத்த புத்தரின் சிலைகள், தொல்லறிஞர் சுவடுகள், அசோகரின் கல்வெட்டுகள் போன்றவற்றின் வாயிலாகப் பௌத்தத்தின் வீச்சு பெரிய அளவில் இருந்திருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

- எ. அன்பன், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x