Published : 16 Feb 2015 10:56 AM
Last Updated : 16 Feb 2015 10:56 AM

எளிமையான முதல்வர்

மிக எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் கேஜ்ரிவால்.

10 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஆடம்பர உடையணிந்து உலாவிய மோடியைக் கண்ட மக்களுக்கு சாதாரண பேண்ட், சட்டை அணிந்து வந்ததோடல்லாமல் ஆணவ வி.ஐ.பி. கலாச்சாரத்தை ஒழிப்பேன் என்று சொல்லி முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் கேஜ்ரிவால். பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

கேஜ்ரிவால் அளித்த உறுதிமொழிகளில் ‘மதக் கலவரங்களைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்' என்ற உறுதிமொழி பாராட்டத் தக்கது. காவல் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் மோடி அரசு கேஜ்ரிவாலின் அரசுக்கு எந்த வகையில் ஒத்துழைப்பு தரும் என்பது தெரியவில்லை.

மத்திய அரசை நல்லிணக்கத்துடன் அணுகி மேலும் பல அதிகாரங்களைக் கேட்டுப்பெற்றால்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். புதிய டெல்லி நிர்வாகம் மற்ற மாநிலங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புவோம்!

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,

திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x