Published : 21 Jun 2016 10:34 AM
Last Updated : 21 Jun 2016 10:34 AM

மெரினாவில் சிலை

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் காலம் சென்ற முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலை திறக்கப்பட்ட செய்தி மகிழ்வை அளிக்கிறது.

மத நல்லிணக்க நாயகன், எளிமையின் சிகரம், மனிதநேயப் பண்பாளர் என்று அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சிறப்புமிக்க அப்துல் கலாமுக்கு தமிழக சட்டசபை வளாகத்தில் அல்லது மெரினா கடற்கரையில் சிலை வைக்க அரசு முன்வர வேண்டும்.

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

***

தொகுதிதோறும் குறைதீர் முகாம்

முதல்வரின் தொகுதியான ஆர்.கே.நகரில் மக்கள் கோரிக்கைகளை அறிந்து, நடவடிக்கை எடுப்பதற்காகத் தனி அலுவலர் முகாம் நடைமுறைக்கு வந்துள்ளதைப் போல, ஒவ்வொரு தொகுதியிலும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x