Published : 04 Jun 2016 11:27 AM
Last Updated : 04 Jun 2016 11:27 AM

உயிர்க்கொல்லி

புகை பிடிப்பதால் என்னென்ன கேடுகள் விளையும் என்று விலா வாரியாக விவரித்துள்ளார் மருத்துவர் கு.கணேசன். புகை பிடிக்கும் பழக்கம் ஒரு விளையாட்டாக ஆரம்பிக்கிறது. பின்னர், அது விட முடியாத பழக்கமாகிவிடுகிறது. சிலர் மன இறுக்கத்தைக் குறைக்கப் புகைப் பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒருகட்டத்தில் உடலளவிலும் மனதளவிலும் பல பிரச்சினைகள் ஏற்பட அதுவே காரணமாகிவிடுகிறது. புகைப்பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பார்த்த பிறகாவது புகைப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். அரசும் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.

- பொன். குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x