Published : 14 Oct 2014 10:14 AM
Last Updated : 14 Oct 2014 10:14 AM

மிகைப்படுத்திய ஒன்று

ஜெயலலிதாவின் ஆட்சி போயஸ் தோட்டத்திலிருந்து நடைபெறும்; திட்டங்கள், அரசு விளம்பரங்கள் அம்மாவின் பெயரில், அவரது புகைப்படத்துடன் வெளியாகும் என்றும் சோனியாவின் புகைப்படம், மன்மோகன் சிங் படத்துடன் அவ்வாறே வெளியானது என்றும் பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்து மிகவும் தவறானது; சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர். அதுமட்டுமல்லாமல் ஐ.மு.கூ. அரசின் வழிகாட்டுத் தலைவர். எனவே, சோனியாவின் படம் மத்திய அரசின் விளம்பரங்களில் வெளிவந்தது. ஜெயலலிதாவின் படம் அவ்வாறே வரும் என்று ஒன்றுபடுத்திச் சொல்வது மிகைப்படுத்திய ஒன்று. இச்செயலை நீதிமன்றமும் அனுமதிக்காது.

- தைலா. சிவலிங்கம்,அழகனூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x