Published : 03 Jan 2024 06:13 AM
Last Updated : 03 Jan 2024 06:13 AM
தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவாகக் கருதப்படும் சென்னை புத்தகக் காட்சி, 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி, ஜனவரி 21 வரை நடைபெறுகிறது. தமிழ் பதிப்புச் சூழலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்குடன், தமிழ்நாடுஅரசு முன்னெடுத்துள்ள பன்னாட்டுப் புத்தகக் காட்சி, இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.
புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிக நூல்களை வெளியிடவும் வாசிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பதிப்பாளர் கே.வி.மேத்யூவின் முன்னெடுப்பில் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்கள் சிலரும் இணைந்து தொடங்கிய கூட்டமைப்புதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர் சங்கம். 24.8.1976இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரசா-இ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் முதல் சென்னை புத்தகக் காட்சியை 1977இல் நடத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT