Published : 26 Jul 2023 06:25 AM
Last Updated : 26 Jul 2023 06:25 AM

ப்ரீமியம்
பெண் தலைமை நீதிபதி: பன்மைத்துவத்துக்கான முன்னெடுப்பு

குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சுனிதா அகர்வால் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகள் நியமனத்தில் பாலின சமத்துவத்தையும் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக சுனிதா அகர்வாலின் நியமனத்தைக்கருதலாம்.

தெலங்கானா, ஒடிஷா, கேரளம், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளைக் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிவந்த சுனிதா அகர்வால், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜூலை 5 அன்று பரிந்துரைத்திருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x