சென்னையில் ‘தி இந்து’ இலக்கியத் திருவிழா

சென்னையில் ‘தி இந்து’ இலக்கியத் திருவிழா
Updated on
1 min read

சென்னை: ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்​கி​யத் திரு​விழா, ஜனவரி 17, 18 தேதி​களில் சென்னை லேடி ஆண்​டாள் பள்ளி வளாகத்​தில் நடை​பெறவுள்​ளது. பன்​மைத்​து​வம் மிக்க தலைப்​பு​களும் எழுத்​தாளு​மை​களும் நிறைந்​த​தாக இந்த இலக்​கி​யத் திரு​விழா அமைய​விருக்​கிறது.

இந்​திய அரசி​யலமைப்​பின் முக்​கி​யத்​து​வம், உடல் மற்​றும் மனநலப் பிரச்​சினை​கள், தற்​போதைய சூழலில் இதழியல் உள்பட பல அம்​சங்​கள் குறித்து இதில் விவா​திக்​கப்பட உள்​ளது. சிறப்​பான படைப்​பு​களைத் தந்த படைப்​பாளி​களைக் கவுரவிக்​கும் வித​மாக இந்த நிகழ்வு நடத்​தப்​படு​கிறது. ‘தி இந்​து’ குழு​மத்​தின் தலை​வ​ரான டாக்​டர் நிர்​மலா லக்​‌ஷ்மண், இந்​தத் திரு​விழா​வின் இயக்​குந​ராகச் செயல்​படு​கிறார்.

நிகழ்​வின் தொடக்க அமர்​வில் ‘அரசமைப்பு முக்​கி​யத்​து​வம்’ குறித்து உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட் கலந்​துரை​யாடு​கிறார். 2025-ம் ஆண்டு சர்​வ​தேச புக்​கர் பரிசைப் பெற்ற ‘ஹார்ட் லேம்ப்’ சிறுகதைத் தொகுப்​பின் ஆசிரியர் பானு முஷ்​டாக், அந்த பரிசுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட ‘தி லோன்​லினெஸ் ஆஃப் சோனியா அண்ட் சன்​னி’ நாவலின் ஆசிரியர் கிரண் தேசாய் ஆகியோர் தங்​களது படைப்​பு​கள் குறித்​துப் பேசுகின்​றனர்.

இந்​திய அரசின் முன்​னாள் தலை​மைப் பொருளா​தார ஆலோ​சகர் அர்​விந்த் சுப்​பிரமணி​யன், பிரிட்​டிஷ் தத்​து​வ​விய​லா​ளர் ஏ.சி.கிரேலிங், தெற்​காசிய ஆய்​வு​கள் நிறு​வனப் பேராசிரியர் தேவேஷ் கபூர், இந்​திய அரசின் முன்​னாள் தூதரும், எழுத்​தாள​ரு​மான கோபால​கிருஷ்ண காந்​தி, கர்​நாடக இசைக் கலைஞர் டி.எம்​.கிருஷ்ணா உட்பட பலர் இதில் உரை​யாற்ற இருக்​கின்​றனர்.

‘டேஸ் அட் தி மொரிசகி புக்​‌ஷாப்' நூலாசிரியர் சடோஷி யாகி​சா​வா, சாகித்ய யுவ புரஸ்​கார் விருதை ‘பர்​னிங்’ எனும் தனது முதல் நாவலுக்​காகப் பெற்ற மேகா மஜும்​தார், குழந்​தைகள் மீதான பாலியல் அத்​து​மீறலைப் பேசுகிற ‘சேட் டைகர்’ நூலாசிரியர் நேய்ஸ் சீனோ உள்​ளிட்ட சர்​வ​தேச எழுத்​தாளு​மை​கள் இந்த நிகழ்​வில் பங்​கேற்​கின்​றனர்.

வட்​டார இலக்​கி​யங்​கள், மொழிபெயர்ப்​பு​கள் குறித்த விவாதங்​களும் விழா​வில் நடை​பெறுகின்​றன. எழுத்​தாளர்​கள் பெரு​மாள் முரு​கன், அப்​புப்​பன், இமை​யம், மனோரஞ்​சன் வியா​பாரி, பேராசிரியர் ஆ.இ​ரா.வேங்​க​டாசலபதி ஆகியோர் உடனான உரை​யாடல்​கள் இந்த நிகழ்​வின் ஓர் அங்​க​மாகத் திகழ​விருக்​கின்​றன. விருதுகளை வெல்​கிற புத்​தகங்​களைப் பதிப்​பிப்​பது பற்​றிய தங்​களது கருத்​துகளை எலிசபெத் குரு​வில்​லா, மானசி சுப்​பிரமணி​யம், கனிஷ்காகுப்தா ஆகியோர் பகிர்ந்து கொள்ள இருக்​கின்​றனர்.

கலைகளின் மூல​மாகப் பார்​வை​யாளர்​களின் கவனத்தை ஈர்ப்​பது மட்​டுமல்​லாமல், அவர்​களுக்கு மதிப்​புமிக்க தருணங்​களைப் பரிசளிக்​கும் வித​மாக​வும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ அமைய​விருக்​கிறது. இயக்​கு​வர் மாரி செல்​வ​ராஜ், கிராண்ட் மாஸ்​டர் விஸ்​வ​நாதன் ஆனந்த், ஊட்​டச்​சத்து நிபுணர் ருஜுதா திவேகர் ஆகியோர் தங்​களது எண்​ணங்​களைப் பகிர்ந்து கொள்​கின்​றனர். நிர்​மலா லக்​ஷ்மணின் ‘தமிழர்​கள்’ ஆங்​கில நூல் தொடர்​பான நாடக வாசிப்​பு அமர்​வை பிரசன்​னா ராமஸ்​வாமி இயக்​குகிறார்​.

சென்னையில் ‘தி இந்து’ இலக்கியத் திருவிழா
“தமிழகத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in