பெண்மை பேசும் பயணம்

பெண்மை பேசும் பயணம்
Updated on
1 min read

சமூகம் ஒரு சிக்​கலான நூற்​கண்​டு; அதன் ஒவ்​வொரு இழைகளை​யும் அடை​யாளம் காட்​டு​கிறது இலக்​கி​யம். அந்த வகை​யில் பெண்மை என்​னும் இழையை ஒரு குறுக்​கு​வெட்​டுக் காட்​சி​யாகக் காட்​டு​கிறது ‘பயணம்’ என்​னும் சிறுகதை நூல். பெண்​களின் மவுனங்​களுக்​குள் புதைந்து கிடக்​கும் கதறல்​களை எழுத்​தாக்கி இருக்​கிறார் அரோ கவிப்​பிரியன்.

முதல் கதை ஒரு கிழ​விக்​கும் ஆட்​டுக்​குட்​டிக்​கு​மான உறவை; பிரிவைப் பேசுகிறது. ‘உயிரைக் கொடுக்​கிறது சுலபம். உயிரைப் பிரித்​துக் கொடுக்​கிறது​தான் தியாகம்’ எனப் பிரி​வின் துயர்​மிகுந்த ஓவி​யம் காட்​சிப்​படுத்​தப்​படு​கிறது.

‘உறக்​கம்’ சிறுகதை, வேலைக்குச் செல்லும் குடும்​பப் பெண்​களின் இயந்​திர வாழ்க்​கை​யைத் திரை​யிட்​டுக் காட்​டு​கிறது. நடந்து முடிந்த; ஆனால் கடக்க முடி​யாத ஒரு துயர நிகழ்வு - அதன் ரத்த ரேகைகளை அழித்து மாற்றி எழுதப்​பட்ட கதை ‘பயணம்’.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in